விஷச்சாராய வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது!

84பார்த்தது
விஷச்சாராய வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து தற்போது வரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பதுங்கியிருந்த சிவகுமார் என்ற முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனால் வினியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி