ஜெயக்குமார் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

51பார்த்தது
ஜெயக்குமார் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் உடற்கூறு ஆய்வில் எடுக்கப்பட்ட கல்லீரல், இரைப்பை, நுரையீரல், உணவு குழாய், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவரது எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி