ஜெயக்குமார் மரணம்: மகன்களிடம் விடிய விடிய விசாரணை

85பார்த்தது
ஜெயக்குமார் மரணம்: மகன்களிடம் விடிய விடிய விசாரணை
திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் மரணத்தில் 5 நாட்களான பின்னரும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. அவரது கை, கால்கள் கம்பியால் சுற்றப்பட்டு வயிற்றுப் பகுதியில் கல் ஒன்றை கட்டியிருந்ததால் இது கொலைதான் என்கிற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர். இந்த நிலையில் ஜெயக்குமாரின் மகன்கள் கருத்தையா ஜெஃப்ரின் மற்றும் ஜோ மார்ட்டின் ஆகிய இருவரிடமும் தனிப்படை அதிகாரிகள் இரவு இரண்டு மணி வரை விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். எந்த தடயமும் சிக்காத காரணத்தினால் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி