பாஜக பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக காவல்துறையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவானார். தற்போது அவர் தாக்கல் செய்த்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமின் கிடைத்த அடுத்த நொடியே தனது X பக்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று பதிவிட்டுள்ளார் அமர்பிரசாத் ரெட்டி.