தொடங்கியது போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை

66பார்த்தது
தொடங்கியது போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற ஆறு அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அது தோல்வியிலேயே முடிந்துள்ளது. இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தற்போது தொடங்கியுள்ளது. 27 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளன. தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி