ஸ்பெயின் சென்று திரும்பியுள்ள தமிழக முதல்வர் மு.க.
ஸ்டாலின் வெளியிட்டுள்ள கடிதத்தில், மாற்று மதத்தினரிடம் வெறுப்பை விதைத்து தேர்தல் ஆதாயம் தேடும்
அரசியல் ஸ்பெயினில் இல்லை. வேறு மதத்தை சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்ட கட்டிடங்களை ஆட்சியாளர்கள் இடித்து தகர்க்கவில்லை. இந்தியாவில் தற்பொழுது வதந்திகளை பரப்பியும் அவதூறுகளால்
அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர். நம்முடைய வரலாறுகளை நாம் சொல்ல மறந்ததால், வரலாறு இல்லாத ஒரு கூட்டம் அதனை திரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.