ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு செப்., 28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் சுமார் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில், 400 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.