நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ!

83பார்த்தது
நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், நிலவின் துருவப் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பாத் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். மேலும், வட துருவப் பகுதியில் உள்ள நீர் பனியின் அளவு தென் துருவப் பகுதியை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்தி