ஐபிஎல் - கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் இலக்கு

57பார்த்தது
ஐபிஎல் - கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் இலக்கு
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றைய (ஏப்ரல் 14) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னோ முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்குகிறது.

தொடர்புடைய செய்தி