15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

50பார்த்தது
15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி