கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 86,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக கர்நாடகா அணைகள் நிறைந்துள்ளது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 50,000 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35,917 கனஅடி நீரும் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.