குழந்தைகளுக்குப் பரிசாக புத்தகங்களை வழங்கும்போது அவர்களின் பரிசின் மீதான ஆர்வம் புத்தகங்களின் மீது திரும்பும். பெற்றோர்கள், வாசிக்கும் செய்தித்தாள் மற்றும் புத்தகங்களின் சுவாரஸ்யமான பகுதிகளை குழந்தைகளிடம் சத்தமாக படித்துக்காட்டுவது, அவற்றில் உள்ள பாதி கதையை நீங்களே சொல்லி ஆர்வம் ஏற்படுத்திய பின்னர் மீதி கதையை அவர்களாகவே வாசிக்கச் செய்வது, அவர்களை கதை சொல்ல ஊக்குவிப்பது போன்ற செயல்களின் மூலம் அவர்களின் வாசிப்புப் பழக்கம் வளரும்.