உத்தரப்பிரதேசத்தில் மற்றொரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவரது முகத்தில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு, கோடரியால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். சுல்தான்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சூரஜ் குமார் சோன்கர் என்ற நபரிடம் கடனாகப் பணத்தைக் கொடுத்த பெண், அதைத் திரும்பக் கேட்டபோது இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார். அவர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்றுள்ளார். அதன்பின், அந்த பெண்ணை கோடரியால் கொன்று, சடலத்தை சாலையில் வீசிச் சென்றுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.