ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார்

59பார்த்தது
ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் மீது டன் கணக்கான எடைகொண்ட பதுங்கு குழி குண்டுகளை வீசி இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் மேலும் 300 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவால் இனி இந்த உலகத்தை பயமுறுத்த முடியாது என்று இஸ்ரேலிய ராணுவம் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி