திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 2) பல்வேறு பகுதிகளில் பரவலாக சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சில இடங்களில் மரங்கள் முறிந்து, மின்தடை
,போக்குவரத்து பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. எரியோடு பகுதியில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. நால் ரோடு பகுதியிலிருந்த உயரமான ஆதி மரம் சாய்ந்து சக்திவிநாயகர் கோயில் மீது விழுந்தது. இத்துடன் இப்பகுதியில் விவசாய தோட்டத்திற்கு மின்சப்ளை தந்த 3 மின்கம்பங்களும் சேதமடைந்து முறிந்தது.