லாரி டயர் ஏறியதில் தலை நசுங்கி பலி

67பார்த்தது
சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (45) கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (40). இருவரும் இருசக்கர வாகனத்தில் அரூர் பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்ரோடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சாலையில் தோண்டப்பட்டு இருந்த சிறு குழிகளில் தடுமாறி சாலையில் விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி ரேவதி மீது ஏறி இறங்கியது. இதில் கணவன் சுதாகர் கண்முன்னே மனைவி ரேவதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி