திருமணமாக இருந்த மணப்பெண்ணை கொன்ற காதலன்

58பார்த்தது
திருமணமாக இருந்த மணப்பெண்ணை கொன்ற காதலன்
உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டம் சோனகிரி பகுதியைச் சேர்ந்த காஜல் (22) என்பவருக்கும் ஜான்சியைச் சேர்ந்த ராஜ் என்ற இளைஞருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முன், மணப்பெண் அருகில் உள்ள அழகு நிலையத்திற்கு சென்றார். மேக்கப் இறுதிக்கட்டத்தில் இருக்கும் போது அவரது முன்னாள் காதலர் தனிராம் அங்கு வந்தார். அவர் தன்னுடன் வர மறுத்ததால் கோபமடைந்த அவர், மணப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி