10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

59பார்த்தது
10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து கொண்டு சென்றனர். அதே போல், கடந்த 22ஆம் தேதி நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஏற்கனவே 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.

தொடர்புடைய செய்தி