முன்னாள் அமைச்சர் வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டு

73பார்த்தது
முன்னாள் அமைச்சர் வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டு
முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஈரோடு மாணிக்கம்பாளையம் விஜபி நகரில் ஒரு வீடு உள்ளது. இதேபோல, மொடக்குறிச்சி அருகே சின்னம்மாபுரம் கிராமத்தில் 25 ஏக்கரில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. சின்னம்மாபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பண்ணை வீடு, தோட்டத்தை கவனித்து வருகிறார். இந்நிலையில் கோவிந்தராஜ் வழக்கம் போல் பண்ணை வீட்டைப் பூட்டிவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளார். தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வரும் நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த சந்திரசேகர் தோட்டத்துக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதுகுறித்து சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவருக்கும், மலையம்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஜெகதீசன் மற்றும் போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருள்கள் சிதறி கிடந்தன. மேஜையின் பெட்டியில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி