முன்னாள் எம்எல்ஏ உள்பட 2 பேர் மீது வழக்கு

79பார்த்தது
முன்னாள் எம்எல்ஏ உள்பட 2 பேர் மீது வழக்கு
சேலம் பூலாவரி ஆத்துக்காட்டை சேர்ந்தவர் வெண்ணிலா சேகர். இவர் வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார். இவரது வீட்டின் அருகே பாலு என்பவர் பொக்லைன் எந்திரம் மூலம் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டி உள்ளார். இதுகுறித்து வெண்ணிலா சேகர் எந்த திட்டத்தின் கீழ் குடிநீர் பைப்புக்காக குழி தோண்டுகிறீர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு பாலு இதை ஊராட்சி மன்ற தலைவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து பாலு அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் இதுபற்றி முன்னாள் அதிமுக எம்எல்ஏ எஸ்.கே.செல்வத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு வந்து தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து கற்களை எடுத்து வீசியதாக வெண்ணிலா சேகர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்.கே.செல்வம், பாலு ஆகிய 2 பேர் மீதும் போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.கே.செல்வம் தற்போது அமமுகவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி