பெண்கள் நிர்வாண ஊர்வலம்.. போலீசாரின் கொடுஞ்செயல்

32586பார்த்தது
பெண்கள் நிர்வாண ஊர்வலம்.. போலீசாரின் கொடுஞ்செயல்
கடந்த ஆண்டு மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அணிவகுத்து இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் ஒரு முக்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குகி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தே சமூகத்தைச் சேர்ந்த கலவரக்காரர்கள் நிர்வாணமாக சாலையில் அணிவகுத்துச் சென்றனர். அதற்கு முன், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, பெண்கள் போலீசாரை அணுகியுள்ளனர். ஆனால், அந்த பெண்களை கலவரக்காரர்களிடம் போலீசார் ஒப்படைத்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி