வரதட்சணை தராததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

517பார்த்தது
பெண் வீட்டார் வரதட்சணை கொடுக்காததால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. பெலகாவி மாவட்டத்தில் உள்ள கானாபூர் நகரில், சச்சின் பாட்டீல் என்ற இளைஞருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. தாலி கட்டுவதற்கு முன்பு மணமகன் குடும்பத்தினர் 100 கிராம் தங்கமும், ரூ.10 லட்சம் வரதட்சணையும் கேட்டுள்ளனர். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் முடியாது என்று தெரிவித்துள்ளனர். தான் கேட்ட வரதட்சணை தராததால் தாலி கட்ட மாட்டேன் என மணமகன் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார் மணமகனை தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி