பீகார்: தர்ஷத்ப்பூர் கிராமத்தை சேர்ந்த முசுரூ (60) என்பவரின் மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில் அவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் முசுரூ திடீரென யாருக்கும் சொல்லாமல் மறுமணம் செய்து கொண்டு மனைவியுடன் வந்தார். அவரின் மாப்பிள்ளை கோலத்தை பார்த்து ஷாக்கான மகன்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் சண்டை போட்டனர். இதனால் விஷம் குடித்த முசுரூ தற்போது சிகிச்சையில் உள்ள நிலையில் போலீஸ் விசாரிக்கிறது.