அமெரிக்காவின் பல்டிமோர் மாகாணத்தை சேர்ந்தவர் மேத்யூ ஷெல்ஜேல். பள்ளிக்கூட ஆசிரியரான இவர் கடந்த 2022 ஆகஸ்ட் முதல் 2024 மார்ச் வரையில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். அவர் மீதான விசாரணை கடந்த மார்ச் மாதம் தொடங்கிய போது கைது செய்யப்பட்டார். அண்மையில் அவர் ஜாமீன் கோரியிருந்த நிலையில் வழங்க முடியாது என நீதிமன்றம் மறுத்துள்ளது. பள்ளி வகுப்பறையில் தங்கள் மீது தவறாக கை வைத்து மேத்யூ மோசமாக நடந்துக் கொண்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்தனர்.