அரசு மருத்துவமனைகளில், அரசு ஊழியர்களும் இனி காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 5 லட்சம் ரூபாய் வரை அறுவை சிகிச்சைகளைப் பெறலாம். அத்துடன், 10 லட்சம் ரூபாய் வரை சிறப்பு சிகிச்சைகளைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், உயர்தர சிகிச்சை பெறுவதில் நீடித்துவந்த சிக்கல் தீர்ந்ததாக பயனாளிகள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.