திருப்பத்தூர் மாவட்டதில் 20 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று நாட்றம்பள்ளி நோக்கி சென்றுள்ளது. அப்போது பேருந்தின் எதிரே வந்த இளைஞர் ஒருவர் செல்போன் பேசியபடி வந்துள்ளார். அப்போது பேருந்தின் மீது மோதும்படி வந்த அவர் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் திருப்பியுள்ளார். அப்போது சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் 18 பேர் காயமடைந்தனர். பின்னர் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.