சமீபத்தில் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் மகளிர் இலவச பேருந்து பயணம் குறித்து பிரதமர் மோடியின் கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். இதனால் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50% குறைந்து விடுகிறது. பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. சுற்றுப்புற சூழல்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என பேசியுள்ளார். ஆனால், சென்னையில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் நடைமுறையில் இருக்கும் நிலையில், மெட்ரோ ரயில் பயன்பாடு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதையே ஆய்வுகள் காட்டுவது குறிப்பிடத்தக்கது.