ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சுமார் 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்கு அரசின் முதலீடும், தனியார் பரிவர்த்தனையும் அதிகரித்ததே காரணம் என தெரியவந்துள்ளது. 2024ல் இந்தியா 6.9 சதவீதமும், 2025ல் 6.6 சதவீதமும் வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்யும் என ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. வெளிப்படும் தேவை குறைவாக இருக்கும். இது பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சியை பாதிக்கும். அதே நேரத்தில், மருந்து மற்றும் ரசாயன ஏற்றுமதி வலுவாக உயரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.