பிஸ்கட் வாங்கிகொடுத்து சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்!

74பார்த்தது
பிஸ்கட் வாங்கிகொடுத்து சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்!
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த நல்ல செல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (72). இவர் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகளை அழைத்து அவர்களுக்கு பிஸ்கட் வாங்கிக்கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளுள் ஒருவர் தனது தாயிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது ராமசாமி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் சிவகிரி போலீசார் ராமசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி