ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (ஜூலை 1) கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்த நான்கு விசைப்படகுகளை சிறை பிடித்ததுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.