கர்நாடக மாநிலம் மைசூர் அருகே திங்கள்கிழமை (மே 20) இரவு ஒரு கொடூரம் நடந்துள்ளது. திரைப்பட நடிகை வித்யா அவரது கணவர் நந்தீஷால் படுகொலை செய்யப்பட்டார். சுத்தியலால் தலையில் தாக்கியதில் வித்யா கொல்லப்பட்டார். 2018ல் திருமணம் செய்ததில் இருந்தே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. சமீபத்தில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு தி.நரசிப்பூர் துர்கனூர் கிராமத்தில் உள்ள வீட்டில் வித்யாவை கணவர் நந்தீஷ் கொன்றார். பஜ்ரங்கி, அஜித், வேதா, ஜெய் மாருதி 800 உள்ளிட்ட பல படங்களில் வித்யா நடித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பிலும் அவர் இருந்துள்ளார்.