கூடுதல் விலைக்கு உரம் விற்பதால் விவசாயிகள் வேதனை

65பார்த்தது
கூடுதல் விலைக்கு உரம் விற்பதால் விவசாயிகள் வேதனை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விதைப்பு பணி தீவிரமாக நடைபெறும் நிலையில் விவசாய உரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து தென்னக மானாவாரி விவசாய சங்க தலைவர் பிரேம்குமார், ”விளாத்திகுளம் விவசாயிகள் பருவமழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் உரங்களை பெறுவது பெரும்பாடாக உள்ளது.” என்றார்.

தொடர்புடைய செய்தி