தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 17-ம் தேதி ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட அறிக்கையில், "விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 17.04.2025 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ’முத்து அரங்கத்தில்’ நடைபெறும். இதில் கலந்து கொண்டு விவசாயிகள் பயன் பெறலாம்” என்றார்.