2 பாடங்களில் தோல்வி - மாணவன் தற்கொலை

83பார்த்தது
2 பாடங்களில் தோல்வி - மாணவன் தற்கொலை
தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த 14ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் தர்ஷன், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இரண்டு பாடங்களில் அவர் தோல்வி அடைந்த விரக்தியில் இன்று (மே 16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து போலீசார், மாணவனின் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி