பெண்ணை பலாத்காரம் செய்த முன்னாள் காவலர் சடலமாக மீட்பு

53பார்த்தது
பெண்ணை பலாத்காரம் செய்த முன்னாள் காவலர் சடலமாக மீட்பு
கேரளாவின் மலையின்கீழு நகரை சேர்ந்த ஷைஜு காவல்துறையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். பெண்ணொருவரை திருமணம் செய்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதோடு ஜாமீனும் ரத்தானது. இந்த நிலையில் ஷைஜு எர்ணாக்குளம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவர் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி