கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் தப்பியோடியை கைதி ஸ்டீபன் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இவர் மீது 27 கொள்ளை வழக்குகள் உள்ள நிலையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் அம்பேத்கர் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தார். தற்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.