குன்னத்தூர் அருகே அரசு பொருட்களை திருடிய 2 பேர் கைது

1532பார்த்தது
குன்னத்தூர் அருகே அரசு பொருட்களை திருடிய 2 பேர் கைது
குன்னத்தூர் அருகே அரசுக்கு சொந்தமான பொருட்களை திருடிய 2 பேர்களை குன்னத்தூர் போலீசார் கைது செய்தனர்.

குன்னத்தூர் அருகே உள்ள ஆதியூர், அம்பாள்நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஒயர்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த பச்சைமலை மகன் திருசெல்வன் (வயது 30), திருநெல்வேலி பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்த செல்லதுரை மகன் அருண்ராஜ் (வயது 26) இவர்கள் இருவரும் ஒரு ஆட்டோவில் அரசுக்கு சொந்தமான  ஒயர்களை ஏற்றிக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சந்தேகத்தின் பேரில் இருவரையும் விசாரித்த போது திருட்டுத்தனமாக ஒயர்களை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இருவரையும் கையும், களவுமாக பிடித்து வாகனத்துடன் குன்னத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி