ஈரோடு வி. இ. டி. கலை அறி வியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

83பார்த்தது
ஈரோடு வி. இ. டி. கலை அறி வியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
ஈரோடு வி. இ. டி. கலை அறி வியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்


ஈரோடு வி. இ. டி. கலை அறி வியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு கல்லூரி முதன்மை ஆலோசகர் சி. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் எஸ். லோகேஷ்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் வி. பி. நல்லசாமி வரவேற்று பேசி னார். வேலைவாய்ப்பு அலுவ லர் ரா. ச. ஜெகநாத், பன் னாட்டு நிறுவனங்களில் பணிகளுக்கு தேர்வு செய்யப் பட்ட மாணவர்கள்,. நிறுவனங்கள் மற்றும் ஊதியம் பற்றி பேசினார்.
சி. எஸ். எஸ். கார்ப்நிறுவனத்தின் முன்னாள் இணை இயக்குனர் பத்மா ஜெயராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து, 36 முன்னணி நிறுவனங்களில் 200- க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் முதல் ரூ. 7 லட்சத்து 10 ஆயிரத்திற்கான ஆண்டு வரை ஊதிய உயர்த்துவதற்கான பணி ஆணைகளை பெற்றனர். இதில் பேரா சிரியர்கள், மாணவ - மாணவி கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி