தேமுதிக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா கோவில்களில் வழிபாடு

1077பார்த்தது
ஈரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.

தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந் தலைமையில் பெரிய மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து மாலை சூட்டி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி