திமுக உறுப்பினர் வி. பி. சண்முகசுந்தரம் நினைவேந்தல் நிகழ்ச்சி

57பார்த்தது
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. பி. சண்முகசுந்தரம் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு வி. பி. சண்முகசுந்தரம் உருவ படத்தை திறந்து வைத்தார்.

கோபியில், திமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. பி. சண்முகசுந்தரம் கடந்த 20ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து இன்று அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியும், உருவ பட திறப்பு விழாவும் கோபியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. பி. சண்முகசுந்தரத்தின் உருவ படத்தை திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார். நிகழ்ச்சியில் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், திராவிடர் கழகம், காங்கிரஸ், கொ. ம. தே. க, வி. சி. க உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி