அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

60பார்த்தது
அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
ஜூன் 4க்குப் பிறகு யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவுசெய்வார்கள் என அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக காணாமல் போய்விடும் என்று சிலர் சொல்கிறார்கள். யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு தெரியும். அதிமுக தெய்வ சக்தி உள்ள கட்சி. அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அதிமுகவை சீண்டிப் பார்க்காதீர்கள். அப்படிப் பார்த்தால் என்ன ஆகும் என்பதை தொண்டர்கள் காட்டுவார்கள்.இந்தியாவிலேயே அதிக தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுகதான் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி