எடப்பாடி புதிய அவதாரம் எடுத்துள்ளார் - ராஜன் செல்லப்பா

450பார்த்தது
எடப்பாடி புதிய அவதாரம் எடுத்துள்ளார் - ராஜன் செல்லப்பா
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் புதிய அவதாரம் எடுத்து திமுக என்ற அசுரனை சூரசம்ஹாரம் செய்து விரைவில் தமிழக மக்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தி தருவார் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். மதுரையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராஜன் செல்லப்பா, தமிழக மக்களுக்கு அனைத்து வகைகளிலும் தீமையான காரியங்களை திமுக அரசு செய்து வருகிறது. அன்றைக்கு அசுரன் எப்படி மக்களை வாட்டி வதைத்தானோ அது போல முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களை பல்வேறு வரிச் சுமைகளை விதித்து வாட்டி வதைத்து வருகிறார் என விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி