மணிப்பூரில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

51பார்த்தது
மணிப்பூரில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு
மணிப்பூர் மாநிலம் காம்ஜோங் மாவட்டத்தில் இன்று மாலை 5.32 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2-ந்தேதி மணிப்பூரின் சாந்தல் மாவட்டத்தில் ரிக்டர் 3.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி