சிறுவனை கடித்த நாய்: உரிமையாளர் மீது வழக்கு

80பார்த்தது
சிறுவனை கடித்த நாய்: உரிமையாளர் மீது வழக்கு
சென்னை அருகே புழலில் 12 வயது சிறுவனை ராட் வீலர் நாய் கடித்த நிலையில், அதன் உரிமையாளர் ஜான் பெட்ரிக்ஸ் மீது இரு பிரிவுகளில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டீச்சர்ஸ் காலனி பகுதியில் 2 நாய்கள் சிறுவனை விரட்டி விரட்டி கடித்ததில் முகம், காது, முதுகுப் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை மதியம் சிறுவன் கிளியோபஸ் ஜெரால்டு கடைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டின் வெளி கதவு திறந்திருந்ததால், 2 நாய்களும் வெளியே நின்றுள்ளது.

சிறுவன் தெருவில் நடந்து சென்ற போது, சிறுவனை பார்த்து அந்த 2 நாய்களும் குரைத்துள்ளது. தொடர்ந்து, சிறுவன் மீது பாய்ந்து 2 நாய்களும் கடித்து குதறியது. காயத்தால் துடித்த சிறுவனை பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி