ஹெல்மெட்டில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து ஒருவருக்கு சிகிச்சை

11886பார்த்தது
ஹெல்மெட்டில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து ஒருவருக்கு சிகிச்சை
கேரளாவின் கண்ணூர் அருகே இரிட்டி பகுதியில் ஹெல்மெட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பு கடித்து ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடியூரைச் சேர்ந்த கே.ரதீஷ் (40) என்பவர் தனது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் ஹெல்மெட்டை வைத்திருந்தார். வனத்துறையில் பணிபுரியும் தற்காலிக ஊழியரான ரத்தீஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஹெல்மெட்டிற்குள் இருந்த பாம்பு அவரை கடித்துள்ளது.

உடனடியாக அவரை கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். ஹெல்மெட் உள்ளே இருந்த பாம்பை ரதீஷ் தூக்கி எறிந்ததால், என்ன பாம்பு கடித்தது என அடையாளம் காண முடியவில்லை. பின்னர், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், அந்த பாம்பு விஷமற்ற மலைப்பாம்பு என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

தொடர்புடைய செய்தி