பூ மாதிரி இட்லி வேணுமா? இத ஃபாலோ பண்ணுங்க..!

64பார்த்தது
பூ மாதிரி இட்லி வேணுமா? இத ஃபாலோ பண்ணுங்க..!
வீட்டில் உள்ள தாய்மார்களுக்கு எவ்வளவு தான் பக்குவமாக மாவு அரைத்தாலும் கடையில் விற்பனை செய்வது போல, பூ மாதிரி இட்லி வராது. அதற்கு ஒரு ஐடியா இருக்கிறது. இட்லிக்கு மாவு அரைக்கும் போது சாதாரண தண்ணீர் தெளித்து அரைக்காமல், அதனுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை வெளியில் வாங்காமல் வீட்டில் ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்துவது நலம். மேலும் அந்த மாவை இரவு முழுவதும் புளிக்க வைத்து விட்டு, மறுநாள் காலையில் சுட்டால், இட்லி பூ மாதிரி வரும். தோசையும் பஞ்சு போல வரும். இந்த டிப்ஸை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..!

தொடர்புடைய செய்தி