நீட் தேர்வுவை முழுமையாக ரத்து செய்யும் வரை திமுக போராடும் - உதயநிதி

64பார்த்தது
நீட் தேர்வுவை முழுமையாக ரத்து செய்யும் வரை திமுக போராடும் -  உதயநிதி
நீட் தேர்வுவை முழுமையாக ரத்து செய்யும் வரை திமுக போராடும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்று வரும் இளைஞரணி மாநாட்டில் தீர்மானங்களை வாசித்த அவர், 'புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி மத்திய அரசு விடும் மிரட்டலுக்கு கடும் கண்டனம். பாஜக ஆட்சியை வீழ்த்திடவே திமுக இளைஞரணி செயல்படும். பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிரான பரப்புரையை திமுக இளைஞரணி முன்னெடுக்கும். ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும். கல்வி, மருத்துவத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தராக இருந்திட வேண்டும். நீட் தேர்வு விலக்கில் உறுதியாக வெற்றி பெற்றே தீருவோம்' என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி