மனைவியை கொன்று நாடகமாடிய கொடூர கணவன்!

65பார்த்தது
மனைவியை கொன்று நாடகமாடிய கொடூர கணவன்!
கோவாவில் ஆடம்பர விடுதி ஒன்றில் மேலாளராக பணிபுரியும் கௌரவிற்கும், தீக்ஷாவிற்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் கௌரவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்குமிடையே மோதல்கள் இருந்து வந்துள்ளது. இதனிடையே நேற்று மதியம் 3 மணி அளவில் மனைவியை கடற்கரைக்கு கூட்டிச் சென்று மூழ்கடித்துவிட்டு, தான் அருகில் இல்லாத நேரத்தில் கடற்கரையில் மூழ்கி விட்டதாக நாடகமாடி உள்ளார். ஆனால், அங்கிருந்த சுற்றுலா பயணி எடுத்த வீடியோவில் கௌரவ் கடற்கரையிலிருந்து தனியே வருவது தெரிய வந்ததையடுத்து, அவர் வசமாக சிக்கிக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி