வீதிகளில் கழுதைகள் ஊர்வலம்.. மக்கள் அவதி!

67பார்த்தது
வீதிகளில் கழுதைகள் ஊர்வலம்.. மக்கள் அவதி!
தூத்துக்குடி: நாசரேத் பேரூராட்சியில் தெருக்களில் கழுதைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பல நேரங்களில் ஒரு கழுதை மற்றொரு கழுதையை விரட்டிச் செல்வதால் இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் அவதிக்குள்ளாகின்றனர். நாசரேத் மெயின் ரோடுகளில் கும்பலாக கழுதைகள் அணிவகுத்து செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே நாசரேத் பேரூராட்சி நிர்வாகம் தெருக்களிலும், மெயின் ரோடுகளிலும் கழுதைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவும், சுற்றித்திரியும் கழுதைகளை காப்பகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. தெருநாய்கள் தொல்லை ஒருபுறம் இருக்க, கழுதைகளாலும் மக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

தொடர்புடைய செய்தி