ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டிய தினேஷ் கார்த்திக்

60பார்த்தது
ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டிய தினேஷ் கார்த்திக்
நடப்பு ஐபிஎல் தொடரின் 36வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இது ஆர்.சி.பி வீரர் தினேஷ் கார்த்திக் விளையாடும் 250வது ஐபிஎல் போட்டியாகும். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மகேந்திர சிங் தோனி மற்றும் ரோகித் சர்மாவுக்கு பிறகு 250 போட்டிகளில் விளையாடிய 3வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தோனி 257 போட்டிகளிலும், ரோகித் சர்மா 250 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி